அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு

61 0

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (26) மாலை 6.30 மணியளவில் அவிசாவளை தல்துவ சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.