மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே முக்கியமான சாட்சி

261 0
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே மிகவும் முக்கியமான சாட்சியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி விநியோகம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை சாட்சியம் வழங்கியவர்களுள் முன்னாள் பணிப்பாளரான பெண் ஒருவரே முக்கிய சாட்சிகளை வழங்கியுள்ளார்.
தமக்கு அழுத்தம் வந்தது, அதனால் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாக குறித்த முன்னாள் பெண் பணிப்பாளர்  கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனூடாக பெண்களிடம் உள்ள உண்மைத் தன்மை வெளிப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.