முந்தலில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவி உயிரிழப்பு

54 0

முந்தல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிச்சகுளம் ஆற்றில்  நீராடச் சென்றவர்களில் பாடசாலை மாணவி  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) உயிரிழந்த மாணவி உள்ளிட்ட குழுவினர் நீராடச் சென்றுள்ளனர், இதன்போதே  உடப்புவையை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.