அர்ஜுண மகேந்திரனுக்கு அழைப்பாணை

253 0

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் சாட்சியமளிக்க மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுண மகேந்திரனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுண மகேந்திரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிணை முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் நிதி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட தமக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பந்துல குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமையவே ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.