இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவருக்கு அமெரிக்க 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

237 0

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டவர் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட, அமெரிக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கத்துடன் தொர்புடையதாக தெரிவித்து கடந்த 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இவர் அமெரிக்க காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைப்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் தனது குற்றச்சாட்டை அவர் கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கின், இறுதி தீர்ப்பே நேற்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.