யாழ். சிறைச்சாலையிலிருந்தும் 14 கைதிகள் விடுதலை!

144 0

வெசாக் தினத்தினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (5) யாழ்ப்பாண சிறைச்சாலையிலிருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் வெசாக் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே இக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள், தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்ட கைதிகளே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.