கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், சந்தைகள், பேருந்து சேவைகள் யாவும் முடக்கப்பட்டு கடையடைப்பிற்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.

தமிழ் கட்சிகள் யாவும் அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் வடகிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு கிழக்கில் இன்றைய தினம் முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் யாவும் மூடப்பட்டு வர்த்தகர்கள் தமிழ் கட்சிகளினால் அழைப்பு விடப்பட்ட கடையடைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.


