மட்டு நகரின் வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

208 0

மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று திங்கட்கிழமை (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த  வீதியில் சம்பவதினமான இன்று (24) காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பெதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசர் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

எனவே  இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிசார் கோரியுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு காந்திபூங்காவின் முன்னாள் உள்ள வாவியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒருவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை கோரியுள்ளனர்.