இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் கைது

244 0

 

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 24 இந்திய மீனவர்களில், 14 மீனவர்கள், கச்சைத்தீவு – தலைமன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காங்கேசன்துறை கடற்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறைக்கு அழைத்துவந்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது