அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத ஒழிப்பு எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும், அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியும், புதிய வரி கொள்கையை நீக்குமாறு வலியுறுத்தியும், மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு கோரியும் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை 5 மணி அளவில் நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
இதனை நீர்கொழும்பு மக்கள் சபை ஏற்பாடு செய்திருந்தது.












