குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழப குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதா ? இல்லையா ? என்பது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (06) அறிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயனா கமகேவை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

