ஓ.பன்னீர்செல்வம் தம்பி தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

211 0

ஓ.பன்னீர்செல்வம் தம்பி தொடர்பான வழக்கில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ய வக்கீலுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், அரசுதான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தொடர்புடைய கோவில் பூசாரி கொலை வழக்கில், 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை குற்றவாளிகளாக சேர்க்கக் கோரி தமிழக அரசு வக்கீல் பி.மோகன் தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ய வக்கீலுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், அரசுதான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.