எரிசக்தி அமைச்சர் விசேட அறிவிப்பு!

115 0

இன்று (29) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 6,600 லீற்றர் ஒட்டோ டீசல் 574 லோடுகளும், 6,600 லீற்றர் 92 பெற்றோல் 512 லோடுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் பிராந்திய கிடங்குகளில் இருந்து இவ்வாறு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும், தேவையான பாதுகாப்பை பொலிஸாரும் ஆயுதப்படையினரும் தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.