செவணப்பிட்டியில் வாகன விபத்து : 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு : சாரதி கைது

58 0

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் செவணப்பிட்டி பகுதியில் இன்று புதன்கிழமை (29) அதிகாலை 2 மணிக்கு நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனரகவாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேனும் பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கனரக வாகனமும் இன்று அதிகாலை 2 மணிக்கு செவணப்பிட்டி சிரிகம பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

 

தம்பட்டை பிரதானவீதி திருக்கோவிலைச் சேர்ந்தவரும் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் நிருவாக தலைவருமான 46 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வடிவேல் பரமசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.