இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை…..(காணொளி)

229 0

இராணுவம் கையகப்படுத்தியுள்ள தங்களது சொந்த காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம் இன்று 29 நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு பகுதியில் 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 29 பேரினது 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு போராட்டத்தை கைவிடுவிதற்கு பொதுமக்கள் உடன்படாத நிலையில் 7.75 ஏக்கர் காணிக்குள் விடும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.