நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு – பிரதான சந்தேகநபர் கைது

454 0

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோஸா என்றழைக்கப்படும் எஸ்.டி. ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்கிசஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்டோல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் நான்கு ரவைகளும், ரிவோல்வர் ஒன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ஆறு ரவைகளும் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 20 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.