பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நினைவு அஞ்சலி பேனரை அகற்ற கோரிய டிராபிக் ராமசாமி

242 0

கும்பகோணத்தில் இடையூறாக இருந்த அஞ்சலி பேனரை டிராபிக் ராமசாமி அகற்ற கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்தவர் திடீரென இறந்ததையடுத்து அவருக்கு அஞ்சலி பேனர் மீன் மார்க்கெட் சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டிராபிக் ராமசாமி அந்த வழியாக வந்துள்ளார். நினைவு அஞ்சலி பேனரை பார்த்த அவர் அதனை உடனே அகற்றும் படி கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அதனை அகற்ற முடியாது என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கும்பகோணம் கிழக்கு மற்றும் மேற்கு போலீசார் பேனரை அகற்றும் படி உத்தரவிட்டனர். இதனால் போலீசாருக்கும், மீன் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பேனரை அப்புறப் படுத்தினர். இதையடுத்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.