ஜெயலலிதா ஆவியாக மாறிய சாமியார்

256 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆவியோடு பேசியதாக சாமியார் ஸ்ரீமகரிஷி கூறியுள்ளார்.

இதுகுறித்த தகவலை தெரிவிக்க சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்திக்க இன்று அனுமதி கேட்டுள்ளார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீமகரிஷி தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி வந்து பேசியதாகவும், அதை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து கூற வந்ததாகவும், தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் ஆவி பேசுவது போன்று பேசினார் ‘இறந்துதான், நான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தேன். தொண்டர்கள் பூஜைகள் மற்றும் பிரார்த்தனை செய்ததாக என் ஆன்மா கூறியது.

பன்னீர் செல்வமும், தீபாவும் இணைந்து அதிமுகவை வழி நடத்த வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். பன்னீர் செல்வம் எனது அன்புக்கு பாத்திரமானவர்.

அவருக்கு உறுதுணையாக இருப்பேன். சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்கப் பார்க்கிறார்கள்.

அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது என்று பேசியதாக கூறினார்.