கிளிநொச்சி பூநகரி பகுதியில் பஸ்ஸில் கஞ்சா பொதி மீட்பு

167 0

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ்ஸில் இன்று (02) காலை 04 கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ்ஸை பூனகரி சங்குப்பட்டி பாலத்துக்கு அருகில் சோதனைக்கு உட்படுத்திய போது பஸ்ஸில் இரண்டு பொதிகளில் அடைக்கப்பட்ட நான்கு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூனகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.