மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி

190 0

நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் மரணத்திற்கு முழுப் பொறுப்பு சொல்ல வேண்டியது ஜனாதிபதி, நிதி அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த விடாது நிதியை தேவையான அளவு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கொடுக்காது முடக்கி வைத்திருப்பதும் ஜனாதிபதியே என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (28) திருகோணமலை சல்லி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாரை ஏவி விட்டு இத் தாக்குதலை நடாத்தி அதன் மூலமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டால் நிலமை இன்னும் மோசமடையும்.

அப்படி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரித்தும் கிடையாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.