யாழில் 45 நாட்களேயான சிசு உயிரிழப்பு

64 0

யாழ்ப்பாணம் பண்ணாகம் பகுதியை சேர்ந்த பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையொன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.

பால் குடித்து சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமுற்று உள்ளது. அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .

வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.