யாழில் இரு மகளிர் கல்லூரிகளுக்கு பேருந்துகளை வழங்க சஜித் இணக்கம்

123 0

யாழ்ப்பாணத்துக்கு இன்று (23) வருகை தந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் நல்லை ஆதீனத்தில் நல்லை ஆதின குருமுதல்வர், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு தொடர்பாக ஆறுதிருமுருகன் கருத்து தெரிவிக்கையில்,

 

எதிர்க்கட்சி தலைவரிடம் பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறினோம். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவரால் நாட்டில் சில பாடசாலைகளுக்கு பேருந்து வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல்  யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற இரண்டு பெண்  பாடசாலைகளுக்கு இரண்டு பஸ்வண்டிகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

குறிப்பாக, இலங்கையின் தேசிய வீரராக கருதப்பட்ட இராமநாதனுடைய பாடசாலையாகிய இராமநாதன் கல்லூரி மற்றும் யாழ். இந்து மகளிர் கல்லூரிகளுக்கு பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதற்கு அவர் பேருந்து வழங்க முடியும். தான் அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளார்   என தெரிவித்தார்.