அக்கரைப்பற்றில் யானையின் சடலம் மீட்பு

70 0

ம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மொட்டையாறு மலைப் பகுதியில் நேற்று (22) புதன்கிழமை உயிரிழந்த நிலையில் யானையொன்றை மீட்டுள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

மேலும், யானை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக யானை நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

தற்போது யானையின் சடலத்தை அங்கிருந்து அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.