ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றவே காலஅவகாசம்

259 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்டத் தீர்மானங்களை நிறைவேற்றுவதே, இங்கு முக்கியமானது. தவிர, கால அவகாசம் வழங்குவதில், எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதைப் புரிந்துகொள்ளாதவர்களே, தேவையற்றுப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்று, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “எவ்வாறாயினும், தற்போதை அரசாங்கத்தின் கீழாவது, தமிழ் மக்களின் ​பிரச்சினைக்குத் தீர்வு காணவே எதிர்ப்பார்க்கிறோம்” என்று, அவர் கூறினார்.