எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே

215 0

யுத்தத்தை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் எப்போதும் இல்லாத அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்தியவர்கள் நாமே என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

நான் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்று செயற்பட ஆரம்பித்த நாள் முதலாக நான் செய்த இரகசிய செயற்பாடுகளின் பின்னணியின் இருந்தது சேவை மனப்பாங்கு மட்டுமே.

என் நாடு என் மக்கள் என நினைத்து முழுக் கடமைப்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் மட்டுமே செயற்பட்டேன்.

அப்படியாக நாட்டுக்கு கடமைப்பட்டு ஆற்றிய சேவைகள் காரணமாகவே யுத்த வெற்றி கிடைத்தது நாடு முன்பு எப்போதும் காணாத அபிவிருத்தியைக் கண்டது.

அரசாங்க ஊழியன் ஒருவருக்கு என் நாடு என்ற எண்ணம் வேண்டும். அப்படி நினைத்து செயற்படும் போது மட்டுமே முழுமையான சேவையை செய்ய முடியும்.

ஆனால் இப்போதைய அரசு தரப்பில் இருப்பவர் எவரிடமும் அந்த சேவை மனப்பாங்கு கடமைப்பாடு, அர்ப்பணிப்பு காணப்படவில்லை அதுவே இப்போது நாட்டிற்கு பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் கோத்தபாய தெரிவித்தார்.