களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

227 0

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

பாதாள குழு உறுப்பினரான அருண உதயசாந்த பத்திரன என்ற சமயன் உள்ளிட்ட ஐந்து சிறைக்கைதிகளும் இரண்டு சிறை அலுவலரும் சம்பவத்தில் பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கைதிகளை ஏற்றிச்சென்ற வேளையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை மேற்கொள்ள வந்தவர்கள் காவல்துறை சீருடையில் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.