தமிழகத்தில் படகு விபத்து – 9 பேர் பலி

250 0

தமிழகம் – திருச்செந்தூரில் உள்ள மணப்பாடு கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 9 பேர் பலியாகினர்.

11 பேர் வரையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 10க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

5 பேர் மாத்திரம் பயணிக்கக்கூடிய கடற்றொழில் படகு ஒன்றில் 30க்கும் அதிகமானவர்கள் பயணித்தமையே அனர்த்தத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பயாகலை பகுதியில் 16 பேர் பலியாகிய படகுவிபத்து, அதிகளவானவர்களை ஏற்றிச் சென்றமையாலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.