வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்..(காணொளி)

284 0

வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திலிருந்து சித்தியடைந்து வெளியாகிய பட்டதாரிகள் தமக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி இன்று தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் 200 வரையான

வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அரச வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டுள்ளனர்