ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் , 24 பேரும் பிணையில்

229 0

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் சந்தேகநபர்களை விடுவித்து ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்