நெல்லியடிப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

232 0
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே குண்டுகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளன.
குண்டுகள் இருப்பது குறித்த நெல்லியடி பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர்கள் தகவல் வழங்கியதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடி பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்.
1988 ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறித்த கிணறு பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை(26) மாலை வீட்டின் உரிமையாளர்கள் குறித்த கிணற்றினை துப்பரவு செய்த போது பிளாஸ்டிக் பொருள் தென்படுவதைக் கண்டுள்ளனர்.
பிளாஸ்டிக் பெனரில் விடுதலைப்புலிகள் தயாரித்த 76 குண்டுகள் வெடிக்காத நிலையிலும்  பழுதடைந்த நிலையிலும் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குண்டுகளை பருத்தித்துறை நீதிமன்றில் கையளிப்பதற்கான  நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாகவும் நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.