சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக…(காணொளி)

225 0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 12ஆவது நாளாக தொடர்கிறது.

பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பு மக்களால் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும், குறித்த மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் 24ஆவது நாளாகவும் தொடர்கிறது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னால், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 2ஆம் திகதி முதல் புதுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.