புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்(காணொளி)

268 0

 

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக, கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சமுக வலைத்தளமான முகநூல் ஊடாக ஒன்றிணைந்த இளைஞர், யுவதிகள் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லாட்சி அரசாங்கம் தெற்கில் சீனாவிற்கு காணிகளை வழங்கி வருவது போன்று வடபகுதியிலுள்ள காணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.