பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்..(காணொளி)

275 0

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும், கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வடக்கில் தமிழர் நிலங்களில் நிலைகொண்டுள்ள இராணுவங்கள் வெளியேற வேண்டும், மக்கள் சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்பட்ட வேண்டும் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அரியகுட்டி பரஞ்சோதி, கஜதீபன், அனந்தி சசிதரன் மற்றும் வலிகாமம் வடக்கு மீள்குடியேறிய மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.