சுதந்திர கட்சியின் விசேட கூட்டம் அடுத்த மாதம்

207 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பனவற்றின் விசேட கூட்டம் அடுத்த மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

கட்;சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.