லிவர்குசன் நகரின் அகரம் கலைமாலை நிகழ்வின் நிதிப் பங்களிப்பில் அகரம் படிப்பகம்.

247 0

லிவர்குசன் நகரில் 2022 இல் அகரம் கலைமாலை வெகு சிறப்பாக நடைபெற்றது யாவரும் அறிந்ததே. அந்த நிகழ்வின் மூலம் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியில் வவுனியா செங்கழம்பிலவில் அகரம் படிப்பகம் லிவர்குசன் என்னும் பெயரில் புதிதாக கட்டிட தொகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று அங்கு தைத்திருநாளை வெகுசிறப்பாகக் கொண்டாடியுள்ளனர் .இப் படிப்பகத்தில் படிக்கும் 51 பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டு திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது .இவ் அகரம் 2022 சிறப்புற நடாத்துவதற்கு உதவிய அனுசரணையாளர்கள் நடன ஆசிரியைகள், நடன கலைஞர்கள் ,உதவிகள் புரிந்தவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்.
இத்துடன் ஒரு சில ஒளிப்படங்களையும் இணைத்துள்ளோம்.
நன்றி!