இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்தியா அனுமதி

291 0

இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி இந்திய ருபா பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரேல் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த ஏவுகணை ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், இஸ்ரேலின் விமான நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.