யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

138 0

யாழ்ப்பாணம்-மண்டைதீவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது.

மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்வது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் அரங்கம் அமைப்பது தொடர்பிலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையிலான குழு கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், வடமாகாண அதிகாரிகளின் பங்கேற்புடன் கிளிநொச்சி விளையாட்டு வளாகம் ஆய்வு செய்யப்பட்டது.

இதன்போது, நீச்சல் தடாக வளாகம், உள்ளரங்கு, வெளியரங்கு ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.