அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

312 0

 

கிளிநொச்சி செல்வாநகர் மக்கள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிராமத்திற்கான வீதி கட்டமைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, செல்வாநகர் கிராம உத்தியோகத்தர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ‘நல்லாட்சி அரசே! காட்டுக் காணிகளில் மக்களை குடியமர்த்து’,

‘நாமும் குடிநீரை பெற ஏற்பாடு செய்யுங்கள்’,

‘அரசே வீதிகளை புனரமைத்து தாருங்கள்’

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.