ஊர்காவற்றுறையில் கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது

73 0

ர்காவற்றுறையில் சட்டவிரோதமாக கடல் ஆமை இறைச்சியை வைத்திருந்த குற்றத்துக்காக சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கரம்பன் பகுதியில் வசிக்கும் 52 வயதுடையவர் ஆவார்.

அந்நபரை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.