திருகோணமலையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியது!

82 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் திருகோணமலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (10.01.2023) தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரல ஆகியோர் பங்கேற்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன் போது பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மொட்டு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதற்கான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் எனவும்  இதன் போது தெரிவித்தார்.