அரசாங்க ஊழியர்களிற்கான சம்பளம் குறித்து மக்கள் அச்சமடையவேண்டியதில்லை

154 0

அரசாங்க ஊழியர்களிற்கான சம்பளங்கள் ஓய்வூதியங்கள் குறித்து பொதுமக்கள் கவலையடையத்தேவையில்லை என  இராஜாங்க அமைச்சர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் ஓய்வுதீயங்கள் சமுர்த்தி போன்ற ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமைஅளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேவையற்ற அச்சங்கள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர்நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் உள்ள போதிலும்நாங்கள் இன்னமும் முழுமையான நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.