ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, லுனுகம்வெஹர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரலிஹெல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது புதையல் தோண்டுவதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான ஐந்து பேரும் 25 – 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வீரவில, வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக லுனுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

