பால்சோறு இல்லாத 13வது வருடம் – சந்தியா எக்னலிகொட

150 0

தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்தவர்களை இல்லாமல் செய்த ஆண்டு 2022 என காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா தனது முகநூல் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2023 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி –  எங்கள் வீட்டில் பால்சோறு இல்லாத 13 வருடங்கள்.

இந்த 13 வருடங்களில் 2022ம் ஆண்டே மிகச்சிறந்த வருடம் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

தங்கள் தலைக்கு மேலே ஈ கூட பறக்க முடியாது என நினைத்தவர்களை – தங்களை மன்னர் என நினைத்துக்கொண்டிருந்தவர்களை துவம்சம் செய்த வருடம் இது.

இதன் காரணமாகவே நான் 2023ம் ஆண்டு 2022 போன்று காணப்படவேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.