அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

217 0

தமிழக அரசு அகவிலைப்படியை அறிவித்துள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து கலந்தோலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏற்கெனவே 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.