பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் -வர்த்தகர் ஒருவர் கைது

77 0

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப்பை இன்று சனிக்கிழமை (டிச. 31) காலை தாக்கிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான வர்த்தகரின் நண்பர் ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் இன்று காலை தனது நண்பரை பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த பொலிஸ் ஜீப் மீது கை, கால்களால் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதன்போது சந்தேகத்துக்குரிய வர்த்தகர் மதுபோதையில் இருந்தாரா என்பதை அறிய களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.