11.9 கிலோ தங்கம் கடத்தல்

239 0
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கப் பாளங்கள் தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றை சோதனைக்கு உள்ளாக்கிய போது, அதில் இருந்து 119 தங்கப் பாளங்களாக, 11.9 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 3.58 கோடி இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள குட்லக் ராஜேந்திரன் என்ற வர்த்தகரின் அறிவுறுத்தல் அடிப்படையில் தாம் இதனை கடத்திச் சென்றதாக, கைது செய்யப்பட்டுள்ள காந்தி என்பவர் ஒப்பு கொண்டுள்ளார்.