யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை கல்லூரி நிர்வாகம் புலமை பரிசில் பரீட்சை எழுத விடாது தடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் உள்ள குறித்த கல்லூரியில் சில மாணவர்கள் பரீட்சை எழுத விடாமல் கல்லூரி நிர்வாகத்தால் தடுக்கப்பட்டனர்.

