ஐஸ் போதைபொருளுடன் ஒருவர் கைது

81 0

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாவத்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் புதன்கிழமை (டிச.21) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் ஒன்றின்போது 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ் போதைபொருளை மறைத்து வைத்திருத்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேக நபர் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 9 கிராம் 430 மில்லி கிராம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியையும் வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.