ஸ்டாலின் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.

274 0

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டமன்றத்தில் ஏற்பட்ட நிலவரம் குறித்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி தமிழக சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது மோதல் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான அறிக்கை சட்டமன்ற செயலாளரால் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, சட்டமன்ற நிழக்வுகள் தொடர்பாக விளக்கமளிக்க திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.