முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு

133 0

குருநாகல், பன்னல பகுதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பன்னல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல நகரப்பகுதியில் பன்னலயிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி  மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதுடைய எலபடகம, பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த முச்சக்கரவண்டி குளியாப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதர்ச்சியாக  வீதியின் வலது பக்கம் திரும்புவதற்கு முயன்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.